திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

569பார்த்தது
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. இலா. பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலின்படி
இன்றைய தினம் (29/04/2024) திருப்பூர் தெற்கு மாவட்டம், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம், மடத்துக்குளம் பேரூர் கழகம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி
தி. மு கழக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி, முன்னாள் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்
திரு. இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்களும் துவங்கி வைத்தனர். நிகழ்வில் மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி. கலைவாணி பாலமுரளி, துணைத் தலைவர் திரு. S. R. ரங்கநாதன், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. சாகுல்அமீது முன்னிலையில்,
மாவட்ட பிரதிநிதிகள்
M. ஜெயக்குமார், ப. சிவகுமார் , மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் P. S. தங்கராஜ், வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய பேரூர் கிளைக் கழக மற்றும் சார்பணி நிர்வாகிகள், இளைஞரணி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி