சாக்கடை கழிவுநீர்! தீர்வு காண முடியாமல் தவிக்கும் அதிகாரிகள்

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் காரத்தொழுவு சாலையில், சாலையின் இருபுறமும் வாய்க்கால் போல சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. ஒரு மாதமாக இப் பிரச்சனைக்கு அதிகாரிகள் தீர்வு காண முடியாமல் தவித்து வருகின்றனர். அதிகாரிகள் மட்டுமின்றி கணியூர் பேரூராட்சி மற்றும் ஜோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. இச்சாலையை பயன்படுத்த பொதுமக்கள் தயங்கும் அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு, சாலையில் தேங்கியுள்ள கழிவு நீருக்கு நடுவே இருசக்கர வாகனங்கள் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. எப்போது தீரும் இந்த சுகாதார சீர்கேடு? என பொதுமக்கள் புலம்பி தீர்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி