ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடி சாலையில்,
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர், திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே ஈஸ்வர சாமி தலைமையில்,
திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப் போட்டியை மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் இரா ஜெயராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் 500க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கு பெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல. பத்மநாபன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.
நிகழ்வில் உடுமலை மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர்கள் பேரூராட்சி, ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி