புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு

81பார்த்தது
புதிய ஓய்வூதிய திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு
கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்ததுள்ளது. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி