வாக்குச்சாவடிகள் தயார் படுத்தும் பணிகள் தீவிரம்

554பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் நாளை ஏப்ரல் 19 அன்று நடைபெறும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மடத்துக்குளம் தாலூக்கா சங்கராமநல்லூர் பேரூராட்சி மடத்தூர் ஊராட்சி பள்ளி வாக்குச்சாவடி எண்: 277 மற்றும் 278 ல் வாக்குப்பெட்டிகள் வந்தடைந்தது. அதனை சரிபார்த்து பொறுத்தும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி