சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கோல்  வைத்து பூஜை

79பார்த்தது
சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருக்கோவில். இக் கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது  ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர்.   சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு  பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்தால் அனுமதி கிடைத்தது என்று கூறப்பட்டு ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது.
"திருவோட்டில் விபூதி நிரப்பட்டு அதில் ருத்ராட்சம் மாற்றும் திருப்புகழ் மருந்து புத்தகம்" வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. இன்று தாராபுரத்தை சேர்ந்த சபாபதியின் கனவில் ஆண்டவர் வைக்கோல்  வைத்து பூஜை செய்யுமாறு முருகன் கையில் வேலுடன் குழந்தை ரூபத்தில் மயில் அருகே இருக்க வைக்கோல் போர் அருகே இருந்து  கூறியதாகவும் இதை அடுத்து கோவில் நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளார். பின்னர் பூ கேட்கப்பட்டு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி பூ கொடுக்கப்பட்டது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று வைக்கோல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி