திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது முகாம் அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்
நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் திமுக நகர கழக வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
.