பஸ்ஸில் தவறவிட்ட தங்க நகையை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர்

56பார்த்தது
பஸ்ஸில் தவறவிட்ட தங்க நகையை ஒப்படைத்த டிரைவர், கண்டக்டர்
திருச்சியில் அரசுப் பேருந்தில் பெரம்பலூா் பெண் தவறவிட்ட 10 பவுன் தங்க நகைகள் கொண்ட துணிப் பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. துணிப் பையை மீட்ட ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருச்சி உறையூரைச் சோ்ந்த எஸ். ரமேஷ் ஓட்ட, திருச்சி காட்டூரைச் சோ்ந்த ஆா். கோபாலன் என்பவா் நடத்துநராகப் பணியாற்றினாா்.
இந்தப் பேருந்தில், பெரம்பலூா் வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரைச் சோ்ந்த ச. மதீனா என்பவா், தனது தாய், பாட்டியுடன் சென்னை மாதவரத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைககளைக் கொண்ட துணி பையுடன் ஏறி, பெரம்பலூரில் பையை பேருந்திலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டாா்.
பேருந்து நேற்று அதிகாலை திருச்சி கன்டோண்மென்ட் கோட்ட போக்குவரத்து பணிமனைக்கு வந்தபோது, அதில் கேட்பாரற்றுக் கிடந்த பையை ஓட்டுநரும், நடத்துநரும் சோதனையிட்டனா். பையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததையடுத்து, அதனை பணிமனை பாதுகாவலரிடம் ஒப்படைத்தனா்.
இதனிடையே தவறவிட்ட பையைத் தேடி மதீனா திருச்சி பணிமனைக்கு வந்தாா். அவா்களிடம் 81. 150 கிராம் தங்க மற்றும் 149. 100 கிராம் வெள்ளி நகைகள் உள்ளிட்டவை அடங்கிய துணிப் பையை ஓட்டுநா் எஸ். ரமேஷ், நடத்துநா் ஆா். கோபாலன் ஆகியோா் ஒப்படைத்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி