திருச்சி விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

72பார்த்தது
திருச்சி விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
திருச்சி வரகனேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் அரவிந்த் (வயது 26) இவர் நேற்று திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் போது தலையில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி