கண்டெய்னர் லாரியில் மோதிய அரசு பஸ்: 8 பேர் படுகாயம்

580பார்த்தது
கண்டெய்னர் லாரியில் மோதிய அரசு பஸ்: 8 பேர் படுகாயம்
திருச்சி மணிகண்டம் அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து ஆந்திராவுக்கு தூத்துக்குடி விளாத்திகுளம் பூசனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த வேதலிங்கம் (48) என்பவர் கண்டெய்னர் லாரியை மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மணிகண்டம் அருகே ஓட்டி வந்துள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இதில் பஸ்சில் அமர்ந்திருந்த எட்டு பேர் காயமடைந்தனர்.

அவர்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி