மினி பேருந்து மோதி மூதாட்டிக்கு ஏற்பட்ட துயரம்

3267பார்த்தது
மினி பேருந்து மோதி  மூதாட்டிக்கு ஏற்பட்ட துயரம்
துறையூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக மினி பேருந்து மோதியதில் மூதாட்டி காயம் அடைந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி மீனாட்சி வயது 65 இவர் துறையூர் திருச்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த மினி பேருந்து ஒன்று இவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் கீழே விழுந்த மூதாட்டி மீனாட்சிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுனரான மருவத்தூரை சேர்ந்த சுராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி