துறையூர் தொகுதியில் 75 சதவிகிதம் வாக்குப் பதிவு

1931பார்த்தது
துறையூர் தொகுதியில் 75 சதவிகிதம்  வாக்குப் பதிவு நடந்தது.

பெரம்பலூர் தொகுதிக்குள்பட்ட துறையூர் தொகுதியிலுள்ள 279 வாக்குச் சாவடிகளில் 79126 ஆண் வாக்களார்களும், 88674 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்கள் வாக்குகளை காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்தனர். பி. மேட்டூர், கோணப்பாதை, சிக்கத்தம்பூர், மதுராபுரியில் ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்ட  4 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேரத்திற்குள் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குச் சாவடி பள்ளியின் நுழைவு கதவடைக்கப்பட்டது. டோக்கன்கள் பெற்ற வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர். இறுதியில் இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 223425 பேரில் 75 சதவிகிதம் வாக்களித்தனர்.

தொடர்புடைய செய்தி