முன்னாள் அமைச்சர் சிவபதி குடும்பத்துடன் வாக்குப்பதிவு

571பார்த்தது
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே முன்னாள் அமைச்சர் அதிமு கழக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் என். ஆர். சிவபதி நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் மக்களவைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி தனது குடும்பத்துடன் வந்தார். அங்கு வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். தனக்கு முன்னால் வந்திருந்த மூதாட்டி உடல் தளர்வடைந்த நிலையில் இருந்ததால் அவர் வாக்கு செலுத்தி முடியும் வரை காத்திருந்து, தனது வாக்கை முன்னாள் அமைச்சர் சிவபத்தி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி