முசிறியில் அஞ்சல் துறை சார்பில் உடற்பயிற்சியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. திருச்சிமத்திய மண்டலம் ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் துறையில் அடங்கிய முசிறி துணை அஞ்சலகம் சார்பில் உடற்பயிற்சியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணி பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கவும், உடற்பயிற்சியை தினசரி அங்கமாக உருவாக்கவும், பிட் இந்தியா மிஷனில் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டும் பிரச்சாரத்தை துவங்கினர். பேரணியில் தபால்காரர்கள் மற்றும் கிராமிய அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டி சென்று பொதுமக்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பேரணியில் பொதுமக்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் மற்றும் அஞ்சல் துறை திட்டங்கள் குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை முசிறி போலீசார் செய்திருந்தனர்.