தொட்டியம் தொகுதி வாக்காளர்களுக்கு அருண் நேரு எம்பி நன்றி

70பார்த்தது
விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றில் கொரம்பு அமைக்கப்படும் - பெரம்பலூர் தி. மு. க எம்பி அருண்நேரு பேட்டி

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி அருண்நேரு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பயணம் நடைபெற்றது. திமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம். பி அருண்நேரு தொட்டியம் ஒன்றியம் திருஈங்கோய்மலை கிராமத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பயணத்தை தொடங்கினார். அவர் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு நன்றி. திருஈங்கோய்மலை அடிவாரத்தில் உள்ள போகர் சன்னதிக்கு முன்புறம் இப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப மண்டபம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் காட்டுப்புத்தூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றில் நிரந்தர கொரம்பு அமைப்பதற்கு உரிய நிதியை ஒதுக்கிடவும், அது தொடர்பான பணிகளை விரைந்து செய்து தரவும் மத்திய அரசை வலியுறுத்துவேன். மேலும் 100 நாள் வேலைத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களாக 100 நாள் வேலைத்திட்ட பணிகள் இல்லாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி