உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்

3632பார்த்தது
உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் பறிமுதல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கசாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரோஜா உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரூ. ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 510 இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்ததை அடித்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி