சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்த கணவர் மாயம் மனைவி புகார்

4642பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் ஜே. ஜே. காலனியைச் சேர்ந்தவர்  அருண்குமார்(34). இவரது மனைவி துர்கா(32). அருண்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 16 ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வந்த அருண்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது மனைவி துர்கா பல்வேறு இடங்களில் தேடியும் அருண்குமார் கிடைக்கவில்லை என்பதால்
இதனால் அதிர்ச்சியடைந்த துர்கா இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மாயமான அருண்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி