மைனர் பெண்ணுடன் திருமணம் - வாலிபர் போக்சோவில் கைது

10793பார்த்தது
மைனர் பெண்ணுடன் திருமணம் - வாலிபர் போக்சோவில் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேலசீதேவிமங்கலம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 36). இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர் சிறுமியை டூவீலரில் அழைத்துக் கொண்டு நாகூர் தர்கா, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார். பின்னர் பழனிமுருகன் கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு, அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜெகநாதன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை திருச்சியில் ஒரு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி