மக்களவை தேர்தலையொட்டி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாளை மறுதினம் (மார்ச் 29) கன்னியாகுமரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.