திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலானது அறநிலைத்துறைக்கு சொந்தமானது.
இந்த கோவிலில் நடைபெறும் அனைத்து திருப்பணிகளுக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வரை யானை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த யானை ஆனது உடல் நலக்குறைவால் காலமானது. அதன் பின்னர் இக்கோவில் நடைபெறும் எந்த திருப்பணிகளுக்கும் யானை பயன்பாட்டில் இல்லை.
எனவே இக்கோவிலில் நடைபெறும் அனைத்து திருப்பணிகளுக்கும் யானை பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் அறநிலைத்துறைக்கும் இப்பகுதியை பூர்வீகமாக கொண்ட அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் அவர்களிடம் கேட்டபோது இது தொடர்பான மனு பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.