தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முள்ளூர் ஊராட்சி முத்துக்குமராபுரம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு JSW நிறுவனத்தின் சார்பாக நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கினார். உடன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.