கனிமொழி காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

4703பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியின் வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினார்கள்.

இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும்போது, தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் கனிமொழி கருணாநிதி அவர்களின் வாகனத்தை மறித்து தேர்தல் பறக்கும் படையினர் முழுவதுமாக சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்காக வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தி வாகனத்தை முழுமையாக சோதனை செய்ய முழு ஒத்துழைப்பு அளித்தார். கனிமொழி கருணாநிதி இதைத்தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள திருநெல்வேலி சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி