தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்பு சான்று தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணையை எதிர்த்து தேசிய திறந்தநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தேசிய திறந்தநிலைப் பள்ளியை மத்திய அரசு அமைத்தது குறிப்பிடத்தக்கது.