போலீசை கண்டு தப்ப முயன்ற நபர் கால் முடிந்த நிலையில் மீட்பு

54பார்த்தது
மன்னார்குடி பால் டெப்போ அருகில் தென்வடல் காகிதப்பட்டரை தெருவை சேர்ந்த பார்த்திபன் மகன் ஜெயநாராயணன் (வயது-38) என்பவர் நண்பர்களோடு பேசி வந்துள்ளார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறில் மன்னார்குடி, அரிசிக்கடை சந்து பகுதியை சேர்ந்த நம்பிராஜன், நெடுவாக்கோட்டை, கீழத்தெருவை சேர்ந்த பீர் முகம்மது ஆகியோர் தாக்கியதில் ஜெயநாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இது குறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து எதிரிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நம்பிராஜன் மற்றும் பீர் முகம்மது ஆகியோர் பாமினி ஆற்றங்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாரை கண்டதும், தப்பிக்க முயன்ற நம்பிராஜ் பாலத்திலிருந்து கீழே குதித்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கொலை வழக்கின் மற்றொரு எதிரியான பீர் முகம்மது கைது செய்யப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி