நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது

56பார்த்தது
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் திருவள்ளூர் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் மற்றும ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று ஒலி வாங்கி(MIC) சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர் முதலீடு செய்பவர் வேட்பாளராக நிற்கிறார்கள். 50கோடி 100 கோடி என முதலீடு செய்கிறார்கள் என குற்றம்சாட்டினர்.
பீடி சிகரெட் தயாரிபவன் கூட அவனே விலை நிர்ணயம் செய்கிறான் விவசாயி தனது பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை வேதனை தெரிவித்தார். பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் வாக்கு கேட்கிறார் மக்களுக்கு செய்ததை எதையாவது சொல்லி வாக்கு கேட்டக துப்பு இருக்கா என ஆவேசம் அடைந்தார். ரோட் ஷோ நடத்தி டாட்டா காட்டி வருகிறார் அவருக்கு மக்கள் ஏப்ரல் 19ம் தேதி டாட்டா தான் காட்ட வேண்டும். ஊழல் லஞ்சம் எல்லாத்தையும் சகித்து அடிமையாகி விட்டார்கள் தமிழர்கள்.

இந்திய தேசியம் திராவிடம் இரண்டும் ஒன்று தான்.

காங்கிரசும் பாஜக தேசிய பிரிவினையை தூண்டுகிறது.
கச்ச தீவை தான்தோன்றி தானமாக கொடுத்தது காங்கிரஸ்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி