பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திப்பு திருவிழா.

83பார்த்தது
பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திப்பு திருவிழா.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி வெகுவிமர்சியாக நடைபெற்றது. அப்போது கோவிந்தா, கோவிந்தா எனவும் ஓம் நமச்சிவாய என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. இந்த சந்திப்பு திருவிழாவில் பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரியையும், ஹரனையும் ஒருசேர தரிசித்தனர். பிரம்மோற்சவத்தின் ஒரு நிகழ்வாக தேர்திருவிழா நாளை நடைபெற உள்ளது. வேறெங்கும் நடைபெறாத அபூர்வ நிகழ்வாக பொன்னேரியில் இந்த சந்திப்பு திருவிழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி