மாணவர்களை கிரீடம் அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்

50பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர். 124 எல்கேஜி குழந்தைகள் மற்றும் பள்ளியில் பயிலும் 2000 மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு வந்த போது அவர்களை வரவேற்கும் விதமாக பலூன்கள், கிரீடம் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி