500பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

605பார்த்தது
செங்குன்றம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் லயன் எஸ். ஜெயராமன் 75 வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவா எண்டர்பிரைசஸ் உரிமையாளர் ஓ. கே. பாபு ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் ஆதரவற்றோர் 100 பேருக்கு புடவை வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் ஸ்ரீ சிவா எண்டர்பிரைசஸ் வளாகத்தில் நடைபெற்றது.

லயன் எஸ். ஜெயராமன், செங்குன்றம் லயன் சங்கத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஆர். கண்ணன், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி