நெல்லை மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் இன்று(அக்.7) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.