தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுபிரமணியன் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் அவர் திடீரென நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றார். அமைச்சர் வருவதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மருத்துவமனையின் செயல்பாடு குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தார்.