திருநெல்வேலி வந்த பேருந்தில் ஆயுதங்கள் பறிமுதல்

2948பார்த்தது
சென்னையில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு TN 01 AN 3227 என்ற பதிவு கொண்ட பேருந்து வந்துள்ளது‌. இந்த பேருந்தை இன்று (மே 15) டிப்போவில் சுத்தம் செய்த பொழுது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் பேரூந்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி