போடி அருகே விவசாயி மீது தாக்குதல் போலீசார் விசாரணை

52பார்த்தது
போடி அருகே விவசாயி மீது தாக்குதல் போலீசார் விசாரணை
போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணீஸ்வரன் (57 வயது) இவருடைய தம்பி முத்துராம். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்துள்ளது. சம்பவதினத்தன்று தோட்டத்தில் இருந்த கண்ணீஸ்வரனை, முத்துராம் அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில், போடி தாலுகா போலீசார், முத்துராம் மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி