கம்பம் நகரில் யோகாசன போட்டி நடைபெற்றது

80பார்த்தது
கம்பம் நகரில் யோகாசன போட்டி நடைபெற்றது
தேனி மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் ரிஷி யோகா அறக்கட்டளை இணைந்து கம்பம் நகரில் தென் மாவட்ட அளவிலான யோகாசனப் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட யோகாசன சங்கத் தலைவர் காந்தவாசன் முன்னிலை வகித்தார். ரிஷி யோகா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் துரைராஜேந்திரன் வரவேற்றார். இப் போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி