பூட்டை உடைத்து 100 சவரன் நகை திருட்டு

66பார்த்தது
பூட்டை உடைத்து 100 சவரன் நகை திருட்டு
விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சென்னையில் நாளை நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இதனையறிந்த மர்மநபர்கள் நேற்று (மே 30) நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி