விசாரணை கைதியின் பல்லை பிடுங்கி கொடுமைப்படுத்தியதற்காக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தமிழ்நாடு அரசு அவரை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது. தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மீண்டும் ஏ.எஸ்.பி-யாக தொடர அனுமதித்துள்ளது. அவர் மீதான வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் தீர்ப்பிற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.