முதலமைச்சர் வாகனத்தில் துப்பாக்கியுடன் ஏறிய நபர்

68பார்த்தது
மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வேட்பாளர் சௌமியா ரெட்டிக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று பங்கேற்றார். அப்போது இடுப்பில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர், முதல்வர் பிரசார வாகனத்தில் ஏறி மாலை போடுவேன் என ரகளை செய்தார். அவரை காவல் துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். அந்த நபரை விசாரித்த போது, அவர் பெயர் ரியாஸ் அஹமது என்றும், பல வருடங்களாக தற்காப்புக்காக துப்பாக்கியை வைத்துள்ளதாகவும் கூறினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி