நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டா என ஏமாற்றிய பூங்கா!

10695பார்த்தது
நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டா என ஏமாற்றிய பூங்கா!
பாண்டா கரடிகளை அதிகளவில் கொண்டுள்ள நாடு சீனா. அங்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை உள்ளன. இந்த நிலையில், சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றி வந்துள்ளது. சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். தங்களது பூங்காவில் பாண்டா இல்லை என்பதால் இப்படி செய்ததாகவும், நாம் முடிக்கு டை அடிப்பது போல் நாய்க்கும் டை அடித்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி