மக்களே உஷார்.. இன்ஸ்டன்ட் லோன் எனும் மாயவலை!

80பார்த்தது
மக்களே உஷார்.. இன்ஸ்டன்ட் லோன் எனும் மாயவலை!
இந்தியாவில் கடன் செயலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் ஆசையைத் தூண்டும் இன்ஸ்டன்ட் லோன் திட்டங்களின் மூலம் மக்களை மீளமுடியாத கடனில் தள்ளுகிறது. இந்த செயலிகள் ஒரு கட்டத்துக்கு மேல் அதிக வட்டி வசூலிக்க தொடங்குகிறது. வட்டியை வசூலிக்கும் போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும், தனிப்பட்ட புகைப்படங்களைத் திருடி பொது வெளியில் பரவச் செய்தும் அழுத்தம் தர தொடங்கும். எனவே ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே பதிவிறக்கவும். KYC டேட்டாவை பகிர்வதைத் தவிர்க்கவும். மோசடி குறித்து sachet.rbi.org. என்ற தளத்தில் புகார் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி