ஜல்லிக்கட்டு அபிசித்தர் வெற்றி

579பார்த்தது
ஜல்லிக்கட்டு அபிசித்தர் வெற்றி
தமிழக அரசு சார்பில் மதுரை மாவட்டம் கீழக்கரையில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் 10 காளைகளை அடக்கி ஜல்லிக்கட்டு வீரர் அபிசித்தர் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு தார் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அபிசித்தர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி