மண்ணை கொட்டி பெண்களை கொல்ல முயன்ற சம்பவம்

62பார்த்தது
மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹினௌடா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே ஆகிய இரு பெண்கள் மீது டிப்பர் லாரி ஒன்று மண்ணை கொட்டியது. இதனால், அவர்களில் ஒருவர் இடுப்பு வரையிலும், மற்றொருவர் கழுத்து வரையிலும் மண் குவியலில் சிக்கிக் கொண்டார். ஒரு பெண் சுயநினைவை இழந்தார். உள்ளூர்வாசிகள் அவரை எச்சரித்ததால் அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி