பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரம்.. வன்முறை வெளியாட்டம்!

57454பார்த்தது
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் வந்தமரி கிராமத்தை சேர்ந்தவர் பிரியங்கா. இவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வேறொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பிரியங்கா திருமணத்திற்கு முந்தைய நாள் தனது காதலனுடன் ஊரை விட்டு ஓடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், தனது மகள் காதலித்த இளைஞரின் வீட்டை அடித்து உடைத்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த இளைஞரின் தாயை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக வலம் வரச் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி