திருபுவனம் சரபேஸ்வரருக்கு ருத்ர ஹோமம் மகாபிஷேக வழிபாடு

75பார்த்தது
திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். தமிழ் புத்தாண்டு தினத்தில் சரபேஸ்வரருக்கு மகா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், சந்தனம் என பல்வேறு வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுர ஆதீனம் முன்னிலையில் கடம் புறப்பாடு நடைபெற்று சரபேஸ்வரருக்கு கட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி