பள்ளி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.

60பார்த்தது
திருக்காட்டுப்பள்ளி சர் சிவஸ்வாமி ஐயர் பள்ளி மாணவர்கள் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
திருக்காட்டுப்பள்ளி சர் சிவஸ்வாமி ஐயர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி என் எஸ் எஸ் , பசுமை படை மாணவர்கள் மற்றும் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீஸார் இணைந்து நடத்திய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நடந்தது. திருக்காட்டுப்பள்ளி கடைவீதி மற்றும் பிரதான வீதிகள் வழியாக மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை  வழங்கியும், கோஷங்கள் எழுப்பியும் பேரணியாக  வந்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி