தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிச்சை வேம்பு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல் துறை இயக்குநர் சஞ்சய் குமாரிடம் இருந்து ஒன்றிய அரசின் அதி உத்கிரிஷ்டா சேவா பதக்கம் என்ற பதக்கம் பெற்றார். உதவி ஆய்வாளர் பிச்சை வேம்புக்கு சக காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.