அதிமுக வேட்பாளர் பாபு வடை சுட்டு வாக்கு சேகரித்தார்

2622பார்த்தது
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு கும்பகோணம் திருவலஞ்சுழி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பஜ்ஜி சுடும் தொழிலாளருக்கு உதவிடும் வகையில் பஜ்ஜி சுட்டுக்கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாபு கும்பகோணம் ஒன்றியம் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை தொடங்கினார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து உதிரி மலர்கள் தூவி வீரவாள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாபு கடைவீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்த தொழிலாளிக்கு உதவிடும் வகையில் பஜ்ஜி சுட்டுக்கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே பாரதி மோகன் , தஞ்சை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரத்தினசாமி , கும்பகோணம் ஒன்றிய கழகச் செயலாளர் சோழபுரம் கா அறிவழகன் மற்றும் தோழமை கட்சி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி