பண்டாரவாடையில் கார் வாய்க்காலில் கவிழ்ந்து நால்வர் காயம்

2627பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா பண்டாரவாடை பஸ் நிறுத்தம் அருகே  பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து
வாய்க்காலில் கவிழ்ந்தது. காரை இராஜகிரியை சேர்ந்த தவ்பீக் (24), என்பவர் ஓட்டி வந்தார். காரில் இராஜகிரி பகுதியை சேர்ந்த இர்ஃபான் (26), பண்டாரவாடை பகுதியை சேர்ந்த நூர்முகமது (28), முகமதுரபீக் (31) ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்த காரில் பயணம் செய்த நான்கு பேரில் ஒருவர் லேசான காயங்களுடன் மூவர் பலத்த காயங்களுடன் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் ஆட்டோ மூலம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி