சோழபுரத்தில் கத்தி, அரிவாள் உள்பட 20 பொருட்கள் பறிமுதல்

9966பார்த்தது
சோழபுரத்தில் கத்தி, அரிவாள் உள்பட 20 பொருட்கள் பறிமுதல்
தஞ்சாவூர் சோழபுரம் கேசவமூர்த்தி சித்த வைத்தியர், ஓரினச்சேர்க்கை பழக்கத்தால், அப்பகுதியை சேர்ந்த அசோக்ராஜன் என்ற இளைஞரை கொலை செய்து வீட்டில் புதைத்தார். இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கேசவமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இளைஞர்களுக்கு போதை மற்றும் பாலுணர்வை துாண்டும் முலிகைப்பொடியை தயாரித்து கொடுத்து வந்துள்ளார். இதே போல அசோக்ராஜனுக்கு கொடுத்து ஓரினச்சேர்க்கை பழக்கம் வைத்துள்ளார். அசோக்ராஜன் தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் மனமுடைந்த கேவசமூர்த்தி, கடந்த 13ம் தேதி அசோக்ராஜன் வீட்டிற்கு வந்தபோது கொன்று, உடல் பாகங்களை தனித்தனியே அறுத்து வீட்டின் பின்புறம், கழிவறை மற்றும் வீட்டினுள் முலிகைச் செடி வளர்க்கும் இடங்களில் புதைத்தார்.

பிறகு, சிறிது நாட்களுக்கு பிறகு புதைத்த இடத்தில் இருந்து எலும்புகளை சுடுகாடு பகுதியில் வீசியுள்ளார். மேலும், அனஸ் தாடை எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்ததை போலீஸ் தரப்பில் உறுதி செய்தனர். இதற்கிடையில், கேசவமூர்த்தி வீட்டில் இருந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்து பிளேடு, கத்திரிக்கோல், கட்டிங் மிஷன், அரிவாள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட 20 பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி