4ம் வகுப்பு மாணவனை 108 முறை காம்பஸால் குத்திய சக மாணவர்கள்

6176பார்த்தது
4ம் வகுப்பு மாணவனை 108 முறை காம்பஸால் குத்திய சக மாணவர்கள்
மத்திய பிரதேசம் இந்தூரில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள், சக மாணவனை தாக்கி, காம்பஸ் மூலம் 108 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 10 வயதுக்கு கீழானவர்கள் என்பது நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து பேசியுள்ள குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் பல்லவி போர்வால், மாணவர்களின் இந்த செயல் அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் அப்படி நடந்துகொள்ள என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்க காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்தி