பட்டியலினத்தவரை தாக்கிய பாஜக கவுன்சிலர்

79பார்த்தது
பட்டியலினத்தவரை தாக்கிய பாஜக கவுன்சிலர்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரமணிசந்திரன் (21). இவர் தனது பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய அறச்சலூர் பேரூராட்சியின் 6-ஆவது வார்டு கவுன்சிலரும், மொடக்குறிச்சி பாஜக தெற்கு இளைஞரணி துணை அமைப்பாளருமான கவின்குமாரை ஃபோனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கவின்குமாரின் மனைவி ஃபோனை எடுத்து பேசியுள்ளார். அப்போது ரமணிசந்திரனை தகாத வார்த்தையில் அவர் திட்டியுள்ளார். மேலும் கவின்குமார் 3 பேருடன் சென்று எனது மனைவியுடன் நீ எப்படி பேசலாம் என கூறி ரமணிசந்திரன் மற்றும் அவரது பெற்றோரை தாக்கியுள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரி பேரில் SC/ST வன்கொடுமை தடுப்பு பிரிவில் கவின்குமார் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி