தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று பயங்கர
நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. மிண்டானோவில் ஒரு மால் கட்டிடம் நிலநடுக்கத்தால் குலுங்கியது.
நிலநடுக்கம் காரணமாக மாலில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளன. நிலநடுக்கத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.